மேஜிக் மஷ்ரூம் எனப்படும் போதை காளான்களை நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தேடி அலையும் இளைஞர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதையில் புதுமையைத் தேடுகிறோம் என்கிற பெயரில் ஆபத்து நிறைந்த காடுகளில் இயற்கையாக முளைக்கும் குறிப்பிட்ட சில காளான் வகைகளை தேடிக் கண்டுபிடித்து உட்கொண்டு வருகின்றனர். நச்சுத்தன்மை வாய்ந்த போதை காளான்களால் ஒவ்வாமை, மூச்சுத்திணறல், மரணம் வரை ஏற்பட்டாலும் அது குறித்து எந்தவித கவலையுமின்றி போதைக் காளான்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், போதைக் காளான்களை பயன்படுத்தி வந்த ஊட்டியைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்த போதை காளான்களை பறிமுதல் செய்தது, அவர்களை சிறையில் அடைந்திருக்கிறார்கள். இதில் அதிர்ச்சி என்னவென்றால் கைதான மாணவர்களில் ஒருவர், ஏற்கனவே போதை காளான்களை பயன்படுத்திய சம்பவத்தில் தன்னுடைய காதலி கண்முன்னே உயிரிழந்ததை நேரில் பார்த்தவர். அப்படியிருந்தும் போதை காளான்களை பயன்படுத்தி மீண்டும் காவல்துறையினரிடம் சிக்கியிருக்கிறார். போதை காளான் இந்த அதிர்ச்சி பின்னணி குறித்து நம்மிடம் பேசிய ஊட்டி காவல்துறையினர், " ஊட்டி பாம்பேகேஸில் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஆகாஷ், 2024-ம் ஆண்டு 19 வயது நர்சிங் கல்லூரி மாணவியை காதலித்து வந்த நிலையில், இருவரும் மது அருந்திவிட்டு போதைக் காளான் உட்கொண்டதில் அந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக ஆகாஷை கைது செய்தோம். ஜாமினில் வெளியில் வந்த ஆகாஷ், கல்லூரி நண்பர்களான இமானுவேல், தனுஷ், ஹரிஷ் சேர்ந்து மீண்டும் வனப்பகுதிக்குச் சென்று போதை காளான் சேகரித்து பயன்படுத்தியிருக்கிறார். நண்பர்களுடன் ஆகாஷை கைது செய்துள்ளோம். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் குறித்து வனத்துறை உதவியுடன் கண்காணித்து வருகிறோம்" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/ooty-magic-mushroom-case-update




