திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பிரபல பிரியாணி கடை இயங்கி வருகிறது. இங்கு உணவு சாப்பிட்ட 4 சிறுவர்கள் உட்பட 13 பேருக்கு வாந்தி உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அங்குள்ள உணவுப்பொருட்களை சோதனை செய்த அதிகாரிகள், உணவகத்தை 14 நாட்கள் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-13-people-fall-ill-after-eating-at-a-popular-biryani-shop-eatery-temporarily-closed




