நேபாளம், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருந்துயர் பாதிப்புகளை பார்வையிட்ட பாலிவுட் நடிகர் சோனு சூட், பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் உதவாவிட்டால், வேறு எப்போது உதவப் போகிறோம்? அனைத்து பெரிய நிறுவனங்களும் தங்களது CSR நிதியில் உதவ முன்வர வேண்டும். 'சூட் சேரிட்டி ஃபவுண்டேஷன்' அமைப்பிடம் இருந்து உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், உதவ தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். நேபாள பெருந்துயர் இமயமலையில் ஒரு பகுதியில் உள்ள திபெத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில், போடேகோஷி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த இயற்கையின் சீற்றத்தால், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பாறைகளை உருட்டிக் கொண்டு, மண், சேறு - சகதியுடன் சீறிப்பாய்ந்த பெருவெள்ளத்தில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் சிக்கிக் கொண்டனர். பலர் உயிர் பிழைக்க ஓடியும், கருணையில்லாத பெருவெள்ளம் அவர்களை வாரி சுருட்டிக் கொண்டது. 4 ஆயிரம் பேரை காணவில்லை இதுவரை இந்த பெருவெள்ளத்தில், 1,127 பேர் இறந்துள்ளனர். 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரம் பேரை இன்னும் காணவில்லை. மீட்புப் பணிகள் ஒரு பக்கம் நடந்தாலும், பெருவெள்ளம் நிகழ்ந்து 6 நாட்கள் ஆகிவிட்டதால், பலர் இறந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவில் வளாகத்தில் இன்று, பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்படாத நிலையில், அவர்களுக்கான இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. நேபாள மக்களுக்கு உதவ முன்வந்த சோனு சூட்! நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருந்துயர் பாதிப்புகளை பார்வையிட்ட பாலிவுட் நடிகர் சோனு சூட், அங்கு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நேரடியாக உதவி செய்து வருகிறார். மேலும் நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய அரசின் நடவடிக்கைகளை சோனு சூட் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நேபாளத்திற்கான மீட்பு பணியில் இந்திய அரசு மிகச்சிறப்பாகப் பணியாற்றியுள்ளது. இதற்காக நமது பிரதமர் மோடிக்குத்தான் நன்றி. களத்தில் இறங்கி இங்குள்ள குடும்பங்களை நான் சந்திக்கும்போது, சரிசெய்ய பல காலம் எடுக்கும் என தோன்றுகிறது. இப்போது நாம் அவர்களுக்கு உதவாவிட்டால், வேறு எப்போது உதவப் போகிறோம்? அனைத்து பெரிய நிறுவனங்களும் தங்களது CSR நிதியில் (பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதி) உதவ முன்வர வேண்டும். 'சூட் சேரிட்டி பவுண்டேஷன்' அமைப்பிடம் இருந்து உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், உதவ தயாராக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/when-else-are-we-going-to-help-sonu-sood-speaks-up-for-the-people-of-nepal




