யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அளித்த யூடியூபர்கள் மற்றும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்குப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. Toxic யூடியூபர்கள் சிலர் தங்களுக்குத் தயாரிப்பு தரப்பிலிருந்து நோட்டீஸ் வந்திருப்பதாகத் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால், விமர்சனம் செய்பவர்கள் மீது நிஜமாகவே சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. படம் திரைக்கு வருவதற்கு முன்பே பெங்களூரு நீதிமன்றத்தில் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், படம் குறித்து தவறான மற்றும் அவதூறான கருத்துகளைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், படம் தொடர்பாக அவதூறான மற்றும் தவறான தகவல்களை இணையத்தில் பரப்பத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். நீதிமன்றம் அளித்த இந்த தடை உத்தரவு நேர்மையான சினிமா விமர்சனங்களுக்கோ, தனிப்பட்ட கருத்துகளுக்கோ எதிரானது அல்ல. Toxic படம் பிடிக்கவில்லை என்றோ அல்லது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதையோ நீதிமன்றத்தின் உத்தரவு தடுக்கவில்லை. ஆனால், திட்டமிட்டு அவதூறு பரப்புவதையும், பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதையும் மட்டுமே இந்த உத்தரவு கட்டுப்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். தற்போதை வரை நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதுவும் தயாரிப்பு தரப்பிலிருந்து இன்னும் வெளியாகவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://cinema.vikatan.com/sandalwood/yash-toxic-movie-legal-notice-review-controversy




