மதுரை அண்ணா நகரில் 68-வது ஷோரூமை திறந்துள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், மதுரையில் தனது இரண்டாவது ஷோரூமைத் தொடங்குவதன் மூலம், வளர்ந்து வரும் தனது பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு, தனது பாரம்பரியத்தை உருவாக்கிய மதிப்புகளைத் தக்கவைத்தபடி ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தொடக்க காலம் முதல் தென்னிந்தியா மற்றும் அதற்கு அப்பால் தனது இருப்பை விரிவுபடுத்தி வரும் இந்நிறுவனம், பல தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் வகையில் ஷோரூம்களின் வலுவான வலையமைப்பை உருவாக்கியுள்ளது. அதன் சமீபத்திய விரிவாக்கத்தின் மூலம், ஆழமான கலாச்சாரப் பாரம்பரியமும் பாரம்பரிய மற்றும் நவீன ஜுவல்லரியுடனான நீண்டகாலத் தொடர்பும் கொண்ட மதுரை நகரின் மற்றொரு பகுதியில் தனது இருப்பை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் மேலும் வலுப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 7, 2026 அன்று, மதுரை அண்ணா நகரில் உள்ள 80 அடி சாலையில் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தனது 68-வது ஷோரூமைத் திறந்தது. இது மதுரையில் இந்நிறுவனத்தின் இரண்டாவது ஷோரூமாகும். இதன் மூலம் நகரின் மற்றொரு பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் ஜுவல்லரி தொகுப்புகள் மற்றும் சேவைகள் மேலும் எளிதாகக் கிடைக்கும். புதிய ஷோரூம் தொடக்கத்தை முன்னிட்டு, தங்க நகைகள் வாங்கும்போது ஒரு கிராமிற்கு ₹250 குறைவு, பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்க நகைகள் வாங்கும்போது கிராமிற்கு கூடுதலாக ரூ.150 மதிப்பும் பெறலாம், வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பில் 12.5% குறைவு, வெள்ளிப் பொருட்களுக்கான சேதாரத்தில் (VA) 25% குறைவு மற்றும் வெள்ளி நகைகளின் MRP-யில் 10% குறைவு உள்ளிட்ட அறிமுகச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் இச்சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். மேலும், ஜுவல்லரி பர்சேஸ் பிளான் மூலம் சிறப்பு Gift + Gift Bonanza சலுகையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இரட்டிப்பு வெகுமதிகளைப் பெறலாம். இந்தச் சலுகைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஷோரூமில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும். ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன் கூறுகையில், “மதுரை எப்போதும் தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட நகரமாக இருந்து வருகிறது. அதன் பாரம்பரியம், கோயில்கள், மல்லிகைப்பூ மற்றும் துடிப்பான வாழ்க்கை ஆகியவற்றுக்காகப் புகழ்பெற்றது. எங்களுக்கு இவ்வளவு அன்பை வழங்கிய இந்த நகரில் எங்களது இருப்பை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பது உண்மையிலேயே சிறப்பானது. இங்குள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் பெற்ற வரவேற்பும் நம்பிக்கையும், நகரின் மற்றொரு பகுதியில் இரண்டாவது ஷோரூமை அமைக்க எங்களை ஊக்குவித்தது. இதன் மூலம் எங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நகரின் மற்றொரு பகுதியில் உள்ள மக்களுக்கும் எளிதாகக் கொண்டு சேர்க்க முடிகிறது. மேலும், இந்தப் புதிய ஷோரூம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், மதுரையுடனான எங்களது உறவில் மற்றுமொரு அத்தியாயத்தையும் சேர்க்கிறது” என்றார். ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகையில், “எங்களது 68-வது ஷோரூமைத் திறப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் தருணமாகும். அதிலும், மதுரையில் இது எங்களது இரண்டாவது ஷோரூம் என்பதால், இந்தத் தருணம் மேலும் சிறப்பானதாகிறது. ஒவ்வொரு புதிய ஷோரூமும், பல ஆண்டுகளாக எங்களது வாடிக்கையாளர்களுடன் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. எங்களது ஜுவல்லரி தொகுப்புகளையும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவைகளையும் நகரில் இன்னும் அதிகமான மக்களுக்கு அருகில் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்"என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/business/grt-jewellers-opens-68th-showroom-in-madurai-exciting-offers-for-customers




