தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. இவரது வீடுகளில் தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். எதற்காக இந்தச் சோதனை? தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே தற்போது அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அன்பில் மகேஸின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. திருச்சி: அன்பில் மகேஸ் வீட்டில் சோதனைBRICS: ஒன்றுகூடிய இந்தியா, சீனா, ரஷ்யா; ட்ரம்பிற்கு சொல்லும் Lesson! De Dollarisation புது வடிவிலா? முன்பு. இதற்கு முன்பு, அரசிடமிருந்து அங்கீகாரம் பெற்றுத் தருவதாகத் தனியார் பள்ளிகளிடமிருந்து, கிட்டத்தட்ட ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சமாகப் பெறப்பட்டிருக்கிறது. இது குறித்துப் புகார் எழுந்த நிலையில், தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் திமுக நிர்வாகி பி.டி.அரசகுமாரை இந்த வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/cccb-raid-at-anbil-mahesh-homes-in-private-school-case




