கோவை மாநகராட்சி வ.உ.சி. மைதானம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சம்பத்குமார், “கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையில் ரூ.10 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய சேலைகளை கொடுத்துவிட்டு, புதிய சேலைகளை வாங்கிக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோவையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகள் சீரமைப்பு பணிகள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துகள் குறித்த கேள்விக்கு, “விஜய் சேதுபதியின் விமர்சனத்திற்கு பதில் சொல்ல தேவையில்லை. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்கிறேன். பார்வையாளர்களை கவர்வதற்காக அவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்” என பதிலளித்தார். "திமுக தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை; இல்லையெனில்." - கனிமொழி சந்தோஷ் கண்டனம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/minister-sampathkumar-about-vijaysethupathi-comment-on-entertainment-show




