1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். 2. அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மாவை நன்றாக மென்மையாக பிசைய வேண்டும். 3. பிசைந்த மாவின் மேல் எண்ணெய் தடவி, சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 4. பின்னர் மாவை சிறிய உருண்டைகளாகப் பிரித்து, ஒவ்வொரு உருண்டையிலும் எண்ணெய் தடவ வேண்டும். 5. உருண்டைகளை மெல்லியதாக விரித்து, அதன் மேல் சிறிதளவு எண்ணெய் தடவ வேண்டும். 6. விரித்த மாவை சுருட்டி, மீண்டும் உருண்டையாக செய்து பரோட்டா வடிவில் தட்ட வேண்டும். 7. சூடான தவாவில் பரோட்டாவை வைத்து, இருபுறமும் எண்ணெய் சேர்த்து நன்றாக வேகும் வரை சுட வேண்டும். 8. இறுதியாக பரோட்டாவை கைகளால் மெதுவாக தட்டி அடுக்குகளை பிரித்து, சால்னா அல்லது குருமாவுடன் சூடாக பரிமாறலாம். சமையலை எளிதாக்கும் சின்ன சின்ன டிப்ஸ். இதோ உங்களுக்காக! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/ampstories/photo-story/how-to-make-tasty-parotta-in-hotel-style




