சென்னை, சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பெடபரியா–நாயுடுபேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள 237-வது பாலத்தில், தற்போதுள்ள இரும்பு பாலத்தை அகற்றி கான்கிரீட் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, சில ரெயில்களின் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1 மணி நேரம் தாமதம் சென்னை சென்ட்ரல் – மேற்கு வங்க மாநிலம் ஹவுரா இடையே இயக்கப்படும் 12840-வது எண் எக்ஸ்பிரஸ் ரெயில், ஆகஸ்ட் 31, செப்டம்பர் 3 மற்றும் 10-ம் தேதிகளில் மாலை 7 மணிக்கு பதிலாக இரவு 8 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். இதனால் ரெயில் புறப்படும் நேரம் 1 மணி நேரம் தாமதமாகும். 2 மணி நேரம் தாமதம் இதேபோல், செப்டம்பர் 5 மற்றும் 12-ம் தேதிகளில் புறப்பட வேண்டிய 12840-வது எண் சென்னை சென்ட்ரல்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், மாலை 7 மணிக்கு பதிலாக இரவு 9 மணிக்கு புறப்படும். அன்று ரெயில் சேவை 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். பயணிகள் கவனிக்க வேண்டுகோள் பாலம் மாற்றும் பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், மேற்கண்ட தேதிகளில் பயணம் செய்யும் பயணிகள் மாற்றப்பட்ட ரெயில் புறப்படும் நேரத்தை கவனத்தில் கொண்டு பயணத்தை திட்டமிடுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-departure-time-of-chennai-howrah-express-train




