கொழும்பு, காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வற்றி பெற்ற இந்திய அணி, தற்போது நாளை கொழும்பில் நடைபெறும் 2வது டெஸ்டிலும் அதே ஆதிக்கத்தைத் தொடர விரும்புகிறது. கொழும்பு மைதானம் காலேவை விட வித்தியாசமான சூழலைக் கொண்டது; இங்கு பேட்ஸ்மேன்களுக்கு அதிக ரன்கள் கிடைக்கக்கூடிய ஆடுகளம் அமைக்கப்படுவது வழக்கம். எனவே டாஸ் முக்கிய பங்கு வகிக்கலாம். மேலும், ஐந்து நாட்களிலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக முன்னறிவிப்பு கூறுகிறது. இந்திய அணியின் முக்கிய கவனம் 20 விக்கெட்டுகளை எடுப்பதில் உள்ளது. தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பேட்டிங்கில் மிகப்பெரிய ஸ்கோர் எடுப்பதைவிட எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவதே டெஸ்ட் வெற்றிக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குல்தீப் யாதவ கொழும்பு டெஸ்டுக்கு முன்பான பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதனால் ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து இந்தியா மாற்றங்களை செய்ய வாய்ப்பு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/2nd-test-possibility-of-a-change-in-indias-playing-xi




