புதுடெல்லி, 2027 ஒருநாள் உலகக் கோப்பையை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய திட்டத்தை பிசிசிஐ வகுத்துள்ளது. செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், சமீபத்திய வெளிநாட்டு தொடர் தோல்விகள், வீரர்களின் காயங்கள் மற்றும் எதிர்கால சுற்றுப்பயணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக, அடுத்த ஆண்டு அக்டோபர்–நவம்பர் மாதங்களுக்குள் சிறந்த அணியை உருவாக்குவது முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விளையாடுவதற்கு முன் போதிய ஓய்வு, பயிற்சி போட்டிகள் நடைபெறும் வகையில் அடுத்த போட்டி அட்டவணையை மாற்ற திட்டமிட்டுள்ளது. தொடர்ச்சியான போட்டிகள், நீண்ட கால அட்டவணை வீரர்களின் உடற்தகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக பிசிசிஐ ஒப்புக்கொண்டுள்ளது. காயத்துக்குப் பிறகு வீரர்கள் அணிக்குத் திரும்புவதற்கான உடற்தகுதி நடைமுறைகளும் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/indias-new-plan-for-the-2027-world-cup-is-ready




