மும்பை, பிசிசிஐ ஆண்டுதோறும் சராசரியாக ரூ.3,000 கோடி வரி செலுத்தி வருவதாக அதன் செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். பிசிசிஐக்கு வரி விலக்கு இருப்பதாக பொதுவாக ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால், பிசிசிஐ ஆண்டுக்கு சுமார் ரூ.3,000 கோடி வரி செலுத்தி வருவதாக சைகியா தெரிவித்துள்ளார். மத்திய அரசு சார்பில் பல்வேறு விளையாட்டு அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வரும் நிலையில், பிசிசிஐ அரசிடம் இருந்து நிதியுதவி பெறாமல், மாறாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வரியாக செலுத்தி வருவதாக அவர் கூறினார். மேலும், பிசிசிஐ அரசு நிதியுதவி அல்லது மானியங்களைப் பெறாமல், ஊடக உரிமைகள், ஸ்பான்சர்ஷிப், டிக்கெட் விற்பனை உள்ளிட்ட வருவாய் மூலம் செயல்பட்டு வருவதாக மத்திய தகவல் ஆணையமும் முன்பு குறிப்பிட்டிருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/we-pay-rs-3000-crore-in-taxes-annually-bcci-reveals-striking-information




