ஜார்க்கண்டில் அரசு பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 17-வது நாளை எட்டியுள்ளது. அரசு தரப்புடன் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, இன்று சட்டசபையை நோக்கி பேரணி நடத்த மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையத்தின் பட்டதாரி நிலைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேர்வு முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும், தேர்வு சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும், முறையான ஆட்சேர்ப்பு கால அட்டவணையை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோரிக்கைகளில் குறிப்பாக சிபிஐ விசாரணை தொடர்பாக மாணவர்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. தங்களது கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படாத வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/talks-with-the-government-in-jharkhand-fail-students-march-towards-the-legislative-assembly




