குழந்தை, அதன் அம்மாவுடன் இருப்பதே நல்லது என்று நினைத்தேன். நான் எப்போதும் அனாதையாக வாழவேண்டும் என்கிற எனது சாபத்தை ஏற்றுக்கொண்டுவிட்டேன் என பிரதீப் ஆண்டனி கூறியுள்ளார். ‘பிக்பாஸ் சீசன் 7’ மூலம் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இவர் ‘வாழ்’, ‘டாடா’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தனது காதலி பூஜாவை கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது மனைவி, மகனைப் பிரிந்துவிட்டதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நான் தவறான நபரைத் திருமணம் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். திருமணமானதில் இருந்து மோசமான மனிதனாக மாறிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் நான் ஒருவருடைய வாழ்க்கையை அழித்துக்கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு இருந்தது. இன்னொருவருடன் இணைந்து எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. இப்போது என் திருமண வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்ல முடிவு செய்திருக்கிறேன். இந்த உறவில் என்னால் மூச்சுக்கூட விட முடியவில்லை. குழந்தை, அதன் அம்மாவுடன் இருப்பதே நல்லது என்று நினைத்தேன். நான் எப்போதும் அனாதையாக வாழவேண்டும் என்கிற எனது சாபத்தை ஏற்றுக்கொண்டுவிட்டேன்” எனக் கூறியுள்ளார். இதனிடையே, பிரதீப் ஆண்டனியின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், அவர் பின்னர் அதனை நீக்கினார். இதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில், தனிப்பட்ட விஷயத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தனது தவறு என்றும், அந்த நேரத்தில் ஏற்பட்ட உணர்ச்சியின் வெளிப்பாடாகவே அந்தப் பதிவு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ‘அருவி’, ‘வாழ்’, ‘தாதா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள பிரதீப் ஆண்டனி, ‘பிக்பாஸ் தமிழ் 7’ நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/bigg-boss-pradeep-antony-split-from-his-wife-pooja-shakthi




