15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு, இந்த முறை சொந்த தொகுதியிலேயே வெற்றியைத் தரவில்லை மக்கள். ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையும் இழந்து வருகிறார் மம்தா பானர்ஜி. தற்போது திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி அணி, ரிதப்ரதா பானர்ஜி அணி என இரு அணிகள் உருவாகியுள்ளன. 58 எம்.எல்.ஏக்கள், 20 மக்களவை உறுப்பினர்கள் மம்தாவை விட்டு பிரிந்துவிட்டனர். இதனால், மம்தாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. மம்தா பானர்ஜி"எந்தவொரு உயிரும் விலைமதிப்பற்றது" - சோனம் வாங்சுக் உடல்நிலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு இந்த நேரத்தில் மம்தா பானர்ஜி நேற்று பேஸ்புக் லைவ்வில் அரசியல் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளவை. "என் சொந்த அலுவலகத்தில் இருந்துதான் நான் திரிணாமுல் காங்கிரஸை உருவாக்கினேன். 1984-இல் நான் எம்.பி. ஆனதிலிருந்தும், அதற்கு முன்பே மாணவர் அரசியலில் இருந்தபோதும் இந்த அலுவலகத்தை நான் நடத்தியிருக்கிறேன். அன்று என்னால் முடிந்ததென்றால், இன்றும் என்னால் முடியும். இன்று நாம் சதியால் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். ஒரு நாள், எல்லாவற்றுக்கும் சான்றுகள் கிடைக்கும். துரோகிகளுக்காக நான் மக்களிடம் கைகூப்பி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் சின்னத்தில் அவர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்தீர்கள். அதற்காக நாங்கள் வருந்துகிறோம். நான் 1997-ல் கட்சியைத் தொடங்கியபோது, என்னுடன் ஒரே ஒரு எம்.பி மட்டுமே இருந்தார். ஜனவரி 1, 1998 - எங்களுக்கு சின்னம் கிடைத்தது. வெறும் ஒரு மாதமும் 22 நாள்களுமே இருந்த நிலையில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். அப்போது என்னால் சின்னத்தைக்கூட மக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. சமூக வலைத்தளங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், நினைவிருக்கட்டும். நாங்கள் மக்களின் இதயங்களை வென்றோம். 1998-ல் எங்களுக்கு 7 எம்.பி-க்கள் கிடைத்தார்கள், பின்னர் 8 ஆனார்கள். 1999-இல் மற்றொரு மக்களவைத் தேர்தல் நடந்தது. அப்போதும் எங்களுக்கு 9 எம்.பி-க்கள் கிடைத்தார்கள். மம்தா பானர்ஜிநாடாளுமன்றத்திற்குள் 'நோ' ஸ்மார்ட் வாட்ச்; வாகனத்தில் 10 கி.மீ மேல் வேகம் 'நோ'; MP-களுக்கான ரூல்ஸ்! பின்னர் 2004-இல் நான் முற்றிலும் தனித்து விடப்பட்டேன். 2006-ல் சட்டமன்றத்தில் எங்களுக்கு 30 இடங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் 2004-ல் நான் தனியாக இருந்தபோதும், நாங்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை. நாங்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இன்று மாநிலங்களவையில் 10 எம்.பி-க்களும், மக்களவையில் 8 எம்.பி-க்களும் - மொத்தம் 18 எம்.பி-க்கள் எங்களிடம் உள்ளனர். பல எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். ஆம், சிலர் காவல்துறையினரால் மிரட்டப்பட்டு வருகிறார்கள். 2004-ல் நான் தனியாக இருந்தபோது என்னால் புதிதாகத் தொடங்க முடிந்ததென்றால், 1997-இல் என்னால் புதிதாகத் தொடங்க முடிந்ததென்றால், 2026-லும் புதிதாகத் தொடங்கும் பலம் எனக்கு இருக்கிறது. எனக்கு அவ்வளவு பலம் இருக்கிறது. அரசியலில் இருப்பார்கள். என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும், என் வயதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஒரு மனிதனின் வயது அவனது மனம், உடல் மற்றும் மன வலிமையால் தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் பிரதமரின் வயது என்ன? நான் எப்போதாவது கேட்டேனா? வயதைப் பற்றி யாரும் கேட்பதில்லை" என்று பேசியுள்ளார். Dark web-ல் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவுகள் கசிவு; பாதுகாப்பிற்கு என்னென்ன அச்சுறுத்தல்கள்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/mamata-banerjee-vows-political-comeback-after-election-setback




