அமராவதி, ஆந்திரப் பிரதேசத்தின் போலவரம் அருகே உள்ள கொள்ளகூடம் பகுதியைச் சேர்ந்த 8 பேர் கோதாவரி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் ஆற்றில் வலை வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளம் இந்த வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 5 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரின் உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/sudden-flood-in-godavari-river-5-fishermen-killed




