கோவை, தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் உற்பத்தி செலவுகள் மற்றும் அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், பால் உற்பத்தியை ஊக்குவித்து கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்த விலை உயர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவித்துள்ள கனிமொழி சந்தோஷ், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவோம் என்று உறுதியளித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/hike-in-milk-procurement-price-welcomed-by-mla-kanimozhi-santhosh




