கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக காலையில் இருந்தே தொண்டர்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். இன்று மாநாடு என்பதைத் தாண்டி, விசிக தொண்டர்கள் இன்னொரு ஹேப்பி நியூஸ் - இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள். தவெக அமைச்சரவை விசிக அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்று கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும், யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமலே இருந்தார் திருமாவளவன். விசிக தலைவர் திருமாவளவன்'கேரளா அல்லா. இனி 'கேரளம்' ஆனு' - கேரளம் - பெயர் மாற்றத்திற்குக் காரணம் என்ன? இந்தக் கேள்விக்கான பதில் இன்று கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதே மாதிரி தவெக உடனான கூட்டணியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் திருமாவளவன். மேலும், உளுந்தூர்பேட்டையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. மேடையிலும் கூட்டம் கூட, திருமாவளவனே திணறிவிட்டார். மாநாட்டில் திருமாவளவன் பேசிய முக்கியமானவை. > தற்போது விசிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்கிறது. வருங்காலத்தில் இது ஆளுங்கட்சியாக மாற வேண்டும். > விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் இனி தமிழ்த்தேசியத்தில் இணைந்தே பயணிக்கும். > இந்த மாநாட்டின் 125 தீர்மானங்களும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும். > விசிக தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தி என்பதை இந்த மாநாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. என்று 5 நிமிடங்களுக்கு உள்ளேயே பேச்சை முடித்துவிட்டார் திருமாவளவன். கட்டுக்கடங்காத கூட்டத்தால் தொண்டர்களின் பாதுகாப்பு கருதி என்று விரைவில் பேச்சை முடித்துக்கொண்டார் திருமாவளவன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/thirumavalavan-announces-vck-alliance-with-tvk-at-ulundurpet



