தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக, முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 8) நடைபெற்றது. இதில் தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸின் 11 எம்.பிக்கள், விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகளின் தலா 2 எம்.பிக்கள், ஐயுஎம்எல், மதிமுகவின் தலா எம்.பி என மொத்தம் 19 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். விஜய் தலைமையில் தமிழக எம்.பிக்கள் கூட்டம் இந்நிலையில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் காங்கிரஸ் கட்சியை சாடியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், " தமிழ்நாட்டில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? தங்கள் Proxy அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ், தான் ஆளும் நான்கு மாநிலங்களில் ஏன் அமைதியாக இருக்கிறது? தொகுதி மறுவரையறையை ஆதரித்த திரு.ரேவந்த் ரெட்டி அவர்களைக் கேள்வி கேட்கத் துணியுமா? த.வெ.க அரசைத் தூண்டிவிட்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் கூட்டம் என்று நாடகமொன்றை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன? Fair Delimitation என்ற நிலைப்பாட்டிலிருந்து No Delimitation என்று அடித்திருக்கும் பல்டி தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா? அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் இப்படியான எம்.பி.க்கள் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை? ராகுல் காந்தி No Delimitation என்று இங்கு நாடகமிடும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்களில் ஒருவரான திரு. ரேவந்த் ரெட்டி அவர்கள், Delimitation நடந்தால் தெலங்கானா மாநிலத்தின் பிரதிநித்துவம் அதிகரிக்கும் என்று பேசியிருப்பது ஏன்? தொகுதி மறுவரையறையில் தெளிவான நிலைப்பாடின்றி இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் செய்வது PettyPolitics அன்றி வேறல்ல. நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் Proxy அரசை நடத்திக் கொண்டிரும் ரீல்ஸ் கட்சியின் ரீல்களை மக்கள் நம்பமாட்டார்கள்" என்று தயாநிதி மாறன் சாடியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/dmk-dhayanithi-maran-slams-congress-for-delimitation




