புதுடெல்லி, தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, வாக்காளர் பட்டியலில் சேருவதற்காக 'படிவம் 6'-ஐ பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்கள், தங்கள் பெற்றோரின் திருத்தப்பட்ட வாக்காளர் அட்டை விவரங்களையும் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சிறப்பு திருத்த நடவடிக்கையின்போது சேர்க்கப்பட்டது என்று தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார். இது வாக்காளர்களை அடையாளம் காணவும், விண்ணப்பத்துடன் புதிய வாக்காளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உதவும் என்றும் அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/new-voters-must-submit-their-parents-details-election-commission-explains




