சென்னை, தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் தொடர்பான வழக்குகள் உட்பட முதல்-அமைச்சர் விஜய், எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 54 பேருக்கு எதிராக தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தர விடக்கோரி சுபாம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடியை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் இந்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இன்று இந்த மனு மீதான விசா ரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பான கோரிக்கைகளை சென்னை ஐகோர்ட்டை நாடி அணுகுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/the-supreme-court-dismissed-a-case-related-to-the-tamil-nadu-assembly-election




