அமைச்சர் வன்னி அரசுவின் சமூகநீதித்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. விவாதத்தின் போது சில திமுக, அதிமுக உறுப்பினர்கள், 'நாங்கள் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தியிருக்கிறோம்' என பேசியதற்கு அமைச்சர் வன்னி அரசு கடுமையாக பதிலளித்திருந்தார். வன்னி அரசு அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது, 'தலித்தை பொதுத்தொகுதியில் நிறுத்தினோம் என திமுக, அதிமுக உறுப்பினர்கள் பேசினார்கள். இதை கோட்பாட்டின் அடிப்படையில் பேசுகிறீர்களா? இல்லை பச்சாதாபத்தின் அடிப்படையில் பேசுகிறீர்களா? என்னைப் பொறுத்தவரை நீங்கள் பச்சாதாபத்தின் அடிப்படையில் பேசுவதைப் போலத்தான் தெரிகிறது. கடந்த முறை நாங்கள் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்தோம். உண்மையாகவே கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறீர்கள் என்றால் எங்களுக்கு ஏன் அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல் விட்டீர்கள்? இப்போது 2 எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் ஒருவருக்கு இந்த அரசு அதிகாரம் கொடுத்திருக்கிறது. வன்னி அரசு சாதியக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட கிராமங்களிலிருந்து வந்தவன் நான். அங்கே சாதியக் கொடுமைகள் எப்படியிருக்கிறது என தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் புதிய சட்டை போட்டால் வெள்ளை சட்டை போட்டால் இவனுக்கு வந்த வாழ்வை பார் என்பார்கள். அப்படியொரு இடத்திலிருந்து வந்திருக்கிறோம்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/did-you-field-a-dalit-candidate-in-a-general-constituency-out-of-pity-vanni-arasu-fires-a-barrage-of-questions-in-assembly




