நீலகிரி, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நாடுகாணி டான் டீ தேயிலைத் தோட்டத்தில், யானை ஒன்று படுத்துக் கிடந்ததை பார்த்த தொழிலாளர்கள், அது இறந்துவிட்டதாக நினைத்து அருகில் சென்றனர். ஆனால் அருகில் சென்றபோது யானை அமைதியாக உறங்கிக் கொண்டு மூச்சுவிடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அங்கிருந்து விலகிச் சென்றனர். கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் ஓய்வெடுப்பது வழக்கமாக உள்ளது. மனிதர்களைப் போல படுத்து உறங்கிக் கொண்டிருந்த யானையின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-lay-motionless-in-the-tea-estate-a-shock-awaited-the-workers-who-approached-it




