லண்டன், இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரின் புதிய சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆர்சனல் அணி, கோவென்ட்ரி சிட்டி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டம் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரின் புதிய சீசன் நேற்று துவங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சனல் அணி கோவென்ட்ரி சிட்டி அணியை எதிர்கொண்டது. அடுத்தடுத்து கோல்கள் இப்போட்டியின் 15-வது நிமிடத்தில் அறிமுக வீரர் ஜோலிஸ் கொடுத்த பாஸை கை ஹாவெர்ட்ஸ் கோலாக மாற்றி ஆர்சனல் அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, 23-வது நிமிடத்தில் புகாயோ சாகா கோல் அடித்து அணியின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் ஆர்சனல் அணி 2-0 என முன்னிலையில் இருந்தது. 3-வது கோல் தொடர்ந்து இரண்டாவது பாதி தொடங்கிய சிறிது நேரத்தில், 49-வது நிமிடத்தில் மார்ட்டின் ஒடேகார்ட் கோல் அடித்தார். இதன்மூலம் ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து கோவென்ட்ரி சிட்டி கடுமையாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, புதிய சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/football/premier-league-arsenal-starts-title-defence-with-3-0-win-over-coventry-city




