சிவகங்கை, சிவகங்கை அருகே உள்ள கண்மாய் பகுதியில், கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வரலாற்று ஆதாரமான 'வாணாதிராயர் கல்வெட்டு' கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சான்று சுமார் 4 அடி நீளமுள்ள கல்வெட்டாகும். இதில் 'தெய்வ மாவலி வாணாதிராயர்’ என்பவர் வழங்கிய நிலத் தர்மம் (தானம்) குறித்த முக்கிய தகவல்கள் செதுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் உள்ள தமிழ் எழுத்துக்களின் வடிவமைப்பு மற்றும் வரிவடிவங்களின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இதன் காலத்தைக் கணித்துள்ளனர். ஆட்சிக் காலம் அதன்படி, இக்கல்வெட்டு கி.பி. 1515 முதல் 1533 வரை இப்பகுதியை ஆட்சி செய்த 'சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதிராயன்' காலத்தைச் சேர்ந்தது எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/16th-century-inscription-discovered-near-sivaganga




