பெங்களூரு நேபாளத்தில் டீ குடிக்க சென்று, வெள்ளத்தில் சிக்காமல் 54 கன்னடர்கள் உயிர் தப்பிய அதிசயம் நடந்துள்ளது. நேபாளத்தில் ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு ஏற்ற சீசன் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு, அண்டை நாடான இந்தியா உள்பட ஆசிய, ஆஸ்திரேலிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு நாட்டினரும் நேபாளத்திற்கு சுற்றுலா சென்று வருகின்றனர். ஆன்மிக சுற்றுலா இந்த சூழலில், நேபாளத்தில் கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 600-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் ஆன்மிக சுற்றுலா சென்ற பல கன்னடர்களும் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்க கர்நாடக மற்றும் மத்திய அரசுகள் நேபாள தூதரக அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. உறவினர்கள் மகிழ்ச்சி இதன் ஒரு பகுதியாக நேபாளத்தில் சிக்கி தவித்த 54 கன்னடர்கள் விமானத்தில் நேற்றிரவு பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களை குடும்பத்தினர், உறவினர்கள் மகிழ்ச்சியுடன், கட்டியணைத்து வரவேற்றனர். டீ குடிக்க நின்றோம் இதுகுறித்து சிலர் கூறுகையில், நாங்கள் நேபாளத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் தான் நடைபயணம் மேற்கொண்டோம். ஆனால் வழியில் டீ சாப்பிட ஒரு கடைக்கு சென்றோம். சுமார் அரை மணி நேரம் அந்த கடையில் அமர்ந்திருந்தோம். அப்போது தான் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டது. நாங்கள் டீ குடிக்க வழியில் நின்றதால் உயிர் தப்பினோம். இல்லையெனில் நாங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்போம். அரை மணிநேர இடைவேளை தான் கடவுள் வடிவில் எங்கள் உயிரை காப்பாற்றியது. நாங்கள் உயிருடன் திரும்புவோம் என்ற நம்பிக்கை இல்லை. இது உண்மையிலேயே கடவுள் எங்களுக்கு அளித்த மறுபிறவி. நாங்கள் பாதுகாப்பாக ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி என தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/nepal-flood-miracle-of-surviving-after-going-to-drink-tea-54-kannadas-who-returned-home




