தூத்துக்குடி, விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 15 நாள் நீதிமன்ற காவல் இந்த வழக்கில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை போலீசார் நேற்று முன்தினம் காலை கைது செய்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வைத்து அவரிடம் சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அந்த மனுவை நீதிபதி நிராகரித்ததுடன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை ஆகஸ்ட் 3-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் மனு விசாரணை இதற்கிடையில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று தூத்துக்குடி கோர்ட்டில் நடைபெற்றது. ஜாமீன் மனு தள்ளுபடி இந்த நிலையில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி சுமதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சிறையில் இருப்பார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markandeyan-bail-plea-rejected




