மெக்கா ஒப்பந்தம் - சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஆகும். ஏன் இந்த ஒப்பந்தம்? இந்த ஒப்பந்தம் குறித்து மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "இந்த ஒப்பந்தம், எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிராகக் கூட்டுத் தடுப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் ஆயுதத் தாக்குதலானது, மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும். மெக்கா ஒப்பந்தம்ஈரான், காசா போர்: ட்ரம்பிற்கு தலைவலியாக மாறும் நெதன்யாகு; பாதிக்கும் ட்ரம்பின் இமேஜ்! அதுமட்டுமன்றி, இம்மூன்று நாடுகளுக்கு இடையே அனைத்துத் துறைகளிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இது வழிவகை செய்கிறது" என்று கூறப்பட்டிருந்தது. இதை தவிர, இந்த ஒப்பந்தம் குறித்து வெளிப்படையாக எதுவும் கூறப்படவில்லை. இதனால், இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது எந்த விதமான தாக்குதல் நடத்தப்பட்டாலும், மற்ற இரு நாடுகளும் உதவிக்கு வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதென்ன கேள்வி. எந்த விதமான தாக்குதலாக இருந்தாலும் மற்ற இரு நாடுகளும் உதவிக்கு வரும் என்று நினைத்தால், 2025-ம் ஆண்டு ஒப்பந்தத்தை நினைவில் கொள்ள வேண்டும். 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சவூதி அரேபியா, பாகிஸ்தான் இடையே, இதே போன்ற, மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் (SMDA) ஒன்று போடப்பட்டிருந்தது. ஈரான் போரில் சவூதி அரேபியாவை ஈரான் தாக்கியது. ஆப்கான் தாலிபன்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால், இந்த இரு சம்பவங்களிலுமே இரு நாடுகளும் பரஸ்பர உதவிக்குச் செல்லவில்லை. அதனால் தான், மேலே கூறியுள்ள கேள்வி எழுகிறது. இந்தியா - பாகிஸ்தான்'கடைகளில் UPI பயன்படுத்தி பணம் செலுத்துகிறீர்களா?' - அதற்கு இனி மத்திய அரசு கட்டணம் வசூலிக்கலாம் இந்தியாவிற்கு ஆபத்தா? இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் இருப்பதால் இந்தக் கேள்வி எழுவது மிக இயல்பே. சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் நீண்ட கால நட்பு நாடுகளும். இரு நாடுகளும் இஸ்லாமிய நாடுகள் வேறு. தற்போது ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளுமே உள்ளது. இந்தச் சூழலில் எடுத்துக்கொண்டால், இந்தியாவிற்கும், சவூதி அரேபியாவிற்கு பெருமளவில் எந்தப் பிரச்னையும் எழுந்ததில்லை. இரு நாடுகளுக்கு இடையேயும் 2024-25 நிதியாண்டில் 41,877.63 மில்லியன் டாலர்களுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இரு நாடுகளிடையேயும் உறவு சுமுகமாகவே உள்ளது. இருந்தும், இந்தியா சவூதி அரேபியா விஷயத்தில் கவனிக்க வேண்டியவை. சவூதியிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்தியர்கள் பலர் அங்கு பணிபுரிகின்றனர். அதனால், பாகிஸ்தானின் நட்புக்கு மத்தியில், இந்தியா சவூதி அரேபியா உடனான உறவைப் பேணிக் காக்க வேண்டும். இந்தியா வளைகுடா நாடுகளுடன் நட்பை இன்னும் வலுபடுத்த வேண்டும் என்பதற்கான அலாரம் இது என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்தியா"அமெரிக்காவுடன் நடப்பது பேச்சுவார்த்தை அல்ல; 'செய்தி பரிமாற்றம்'" - ஈரான் அமைச்சரின் விளக்கம் என்ன? இந்தியா, பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் வளைகுடா நாடுகளுடன் நெருங்கும் போது, இது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு ஒரு தனிமைப்படுத்துதலை உருவாக்கலாம். வளைகுடா நாடுகளுடன் மட்டுமல்லாமல், இந்தியா பிற உலக நாடுகளுடனும் உறவை இன்னும் வலுப்படுத்த வேண்டும். அது எல்லா விதத்திலுமே இந்தியாவிற்கு உதவியாக இருக்கும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/mecca-pact-what-saudi-pakistan-turkey-deal-means-for-india




