சென்னை, மேயர் பிரியா சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் கமிஷனர் அமல் ராஜை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்து இருக்கிறார். போலீசார் விசாரணை வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அவதூறாக சித்தரித்து பரப்புவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும் அலுவலக எண்ணுக்கும் அடையாளம் தெரியாத நபர்கள் தொல்லை கொடுப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேயர் பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொல்லை கொடுப்பதாக மேயர் பிரியா புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/mayor-priya-complains-of-harassment-by-unidentified-person




