பெங்களூரு 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இந்த உலக கோப்பை போட்டியில் 48 அணிகள் விளையாடின. லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று முடிவில், அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த போட்டி திங்கட்கிழமை (20-ந்தேதி) அதிகாலை 12.30 மணியளவில் நடைபெறும். இதனை பார்ப்பதற்காக பெங்களூரு நகரின் கோரமங்கலா பகுதியில் உள்ள என்.ஜி.வி. உள்ளரங்கில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதல்-மந்திரி இதனை கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் நேரில் கண்டு களிக்கிறார். அவருடன் கால்பந்து ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள், உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் சேர்ந்து பார்க்க உள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள அட்லாண்டா ஸ்டேடியத்தில், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இரண்டாவது அரையிறுதி போட்டி ஒன்றில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணிகள் விளையாடின. 2-வது பாதியில் அதிரடி இதில் போட்டியின் தொடக்கத்தில், இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால், 2-வது பாதியின் இறுதியில் ஆட்டத்தின் போக்கு தடம் மாறியது. ஆட்டம் முடிவடைய 5 நிமிடங்கள் இருந்தபோது, அடித்த ஒரு கோலும், அடுத்த 7 நிமிட இடைவெளியில் அடித்த 2-வது கோலும் அர்ஜென்டினா அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. இதனால், 1-2 என அர்ஜென்டினா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் முன்னேறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/football/world-cup-football-final-special-arrangements-made-for-karnataka-chief-minister-to-watch-the-match-live




