தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஜே.சி.டி.பிரபாகர் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரைச் சந்தித்துள்ளார். இது குறித்து மக்கள் பவன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு. ஜே.சி.டி.பிரபாகர் - ஆளுநர் அர்லேகர்"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை “தமிழ்நாடு சட்டமன்றச் பேரவையின் 17-ஆவது பேரவையின் முதல் வரவு-செலவுத் திட்டக் (பட்ஜெட்) கூட்டத்தொடர் வெற்றிகரமாக நிறைவுற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு சபாநாயகர் J. C. D. பிரபாகர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களைச் சென்னையில் உள்ள லோக் பவனில் இன்று (13.09.2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்பான இயக்கம் மற்றும் ஜனநாயக நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த பல்வேறு விவகாரங்கள் குறித்து மாண்புமிகு ஆளுநரும் மாண்புமிகு சபாநாயகரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்”. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/tn-speaker-jcd-prabhakar-meets-governor-arlekar




