தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சரத்குமார், விஜய்தான் அடுத்த பிரதமர் எனக் கூறினார். இதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் பதில் அளித்திருந்தார். அமைச்சர் ஜெகதீஸ்வரி இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆமத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, "இன்றைய CM. வருங்கால PM. வருங்காலத்தில் தவெக ஆட்சி மட்டுமே இருக்கும். இன்றைய முதல்வர் விஜய் வருங்கால பிரதமர் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. நாம் அனைவரும் இணைந்து ஒவ்வொரு நொடியும் அதை நோக்கியே பயணிப்போம்" என்று ஜெகதீஸ்வரி பேசியிருப்பது மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. ``ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை." - துரைமுருகன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/chief-minister-vijay-is-future-prime-minister-says-minister-jegatheeswari



