புதுடெல்லி, ஐதராபாத்தை சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை உருவாக்கி உள்ளது. 'ஆகமன்' (வருகை) எனப் பெயரிடப் பட்ட இந்த முதல் பயண ஏவுதல் திட்டம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) பகல் 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த நிலையில், விண்ணில் பாயவுள்ள தனியார் ராக்கெட்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; "இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லாக இன்று விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம் 1. ஸ்கைரூட் நிறுவன விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். விக்ரம்-1 ராக்கெட் வெற்றிபெறட்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/may-the-vikram-1-rocket-succeed-prime-minister-modi-extends-best-wishes



