மும்பை, இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப், நட்சத்திர வீரர் விராட் கோலியின் பீல்டிங் திறனையும், ஆட்டத்தின் மீதான அவரது தீவிரத்தையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். விராட் கோலியைப் பொறுத்தவரை ஆட்டத்தின் மீதான தீவிரம் என்பது எந்த நிலையிலும் சமரசம் செய்ய முடியாத ஒன்று என்று டி. திலீப் தெரிவித்துள்ளார். முதல் ஆறு ஓவர்களில் விராட் கோலி பந்தை தடுத்து நிறுத்தும் விதம், அவரது வேகமான எதிர்வினை மற்றும் பாய்ந்து பந்தை தடுக்கும் திறன் ஆகியவற்றை நாம் பார்த்திருக்கிறோம். கடந்த தொடரிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும், தொடர்ந்து எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் செயல்பட்டார்” என்று அவர் கூறினார். மேலும், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த கட்டத்திலும் கோலி தனது உடற்தகுதியை சிறப்பாக பராமரித்து வருவதாக டி. திலீப் குறிப்பிட்டார். ஆட்டத்தின் கடைசி கட்டத்திலும் அவர் நீண்ட தூரம் ஓடி களத்தடுப்பில் ஈடுபடுகிறார். பந்து அடிக்கப்பட்டவுடன் அதைத் தடுப்பதற்காக முதலில் ஓடிச் செல்லும் வீரராகவும் அவரே இருக்கிறார்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/virat-koliyin-intensity-will-never-drop-dileep-praise




