தந்தை பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "அறநிலையத்துறை கோவில்களில் போலி கல்விச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருந்தால் கட்டாயம் நடவடிக்கை இருக்கும். அதுபோல யாரவது சேர்ந்து இருந்தால் கட்டாயம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். யானைகளை நன்கொடையாளர்கள் விரும்பி கோவிலுக்கு கொடுக்கிறார்கள். நீதிமன்ற அனுமதியுடன் கொடுக்கப்படுகிறது. யானைகள் மிகச்சிறப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாகன்களால் வளர்க்கப்படுகிறது. யானைகளுக்கு மருத்துவ உதவி, உணவு சரியாக கொடுக்கப்படுகிறது" என்றார். கார்த்திகை தீபம் பிரச்னை வழக்கு குறித்த கேள்விக்கு, "கார்த்திகை தீபம் பிரச்னை இல்லை. கொண்டாட்டம். அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். மக்கள் மகிழ்ச்சியாக கொண்டடுவார்கள். மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். எப்பவும் போல கொண்டாடுவோம். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரட்டும். தீர்ப்பு வந்த பின்பு பாருங்கள். தமிழக வெற்றிக் கழகம் விஜய் கோவிலில் செல்போன் விவகாரத்தில் தோல்வி ஒன்றும் இல்லை. மக்களுக்கு தேவையானதை செய்கிறோம். கோவிலில் அரசியல் செய்யும் கூட்டம் உள்ளது. நல்லதோ கெட்டதோ அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். தமிழக முதல்வரின் ஆட்சியில் மக்கள் எந்தக்குறையும் இல்லாமல் சீரும் சிறப்புமாக உள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றிக்காக உழைக்க உள்ளோம். நாங்கள் ஜெயிப்போமா டெபாசிட் வாங்குவோமா? என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளோம். அதனால் பாசிட்டிவ்வாக யோசியுங்கள். எங்கள் கொள்கை விளக்க மாநாடு நடைபெற்ற போதே பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என தைரியமாக சொன்னவர் எங்கள் தலைவர். அவருக்கு எல்லா மதமும் எல்லா மக்களும் ஒன்று தான். நாடு முழுவதும் உள்ள மக்களின் நம்பிக்கையை ஏற்று முதல்வர் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்தார். எங்கள் தலைவருக்கு எம்மதமும் நம் மதம் என்பதுதான் கோட்பாடு" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/our-leader-boldly-stated-that-he-did-not-accept-periyars-atheistic-ideology-minister-ramesh



