அட்லாண்டா, அமெரிக்காவில் அட்லாண்டா ஸ்டேடியத்தில், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இரண்டாவது அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அதிரடியாக விளையாடியது. போட்டியின் தொடக்கத்தில், இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால், 2-வது பாதியின் இறுதியில் ஆட்டத்தின் போக்கு தடம் மாறியது. ஆட்டம் முடிவடைய 5 நிமிடங்கள் இருந்தபோது, அடித்த ஒரு கோலும், அடுத்த 7 நிமிட இடைவெளியில் அடித்த 2-வது கோலும் அர்ஜென்டினா அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. இறுதி போட்டிக்கும் முன்னேறியது. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சமயத்தில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜூட் பெல்லிங்ஹாம், அர்ஜென்டினா அணியின் மாற்று வீரரான வாலண்டின் பார்கோவை தலையில் தட்டினார். அவர் பதிலுக்கு பெல்லிங்ஹாமை தள்ளினார். அப்போது பெல்லிங்ஹாமை, அர்ஜென்டினா வீரர் கள் சூழ்ந்தனர். நிலைமை எல்லை மீறுவதை உணர்ந்த பயிற்சியாளர் குழுவினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/football/bellingham-assaults-argentine-player-viral-video




