Fuld artikel
வளைகுடா (Gulf) நாடுகளில் வாழும் பெரும்பாலான NRI-களின் வாழ்க்கை ஒரே மாதிரியான ட்ராக்கில்தான் பயணிக்கிறது. சிறந்த எதிர்காலத்தை தேடி, 20 அல்லது 30 வயதில் நீங்கள் இந்தியாவை விட்டு புறப்படுகிறீர்கள். சவுதி, துபாய், கத்தார் எனக் கடும் வெயிலில் கடினமாக உழைக்கிறீர்கள். குடும்ப விழாக்கள், பிறந்தநாள்கள், கொண்டாட்டங்கள் என எல்லாவற்றையும் மிஸ் செய்கிறீர்கள். 'இந்தத் தியாகங்களுக்கு எல்லாம் ஒருநாள் நிச்சயம் பலன் கிடைக்கும்' என்று உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக் கொள்கிறீர்கள். ஆனால், 40 வயதை நெருங்கும்போது, அடிமனதில் ஒரு கேள்வி மெல்ல எட்டிப்பார்க்கும். "நான்கு காசு சம்பாதித்த பிறகு என் வாழ்க்கை என்னவாகும்?" நிறைய NRI-கள் ரிட்டையர்மென்ட்டுக்கு பிறகு வருமானம் எவ்வளவு வேகமாக காணாமல் போகும் என்பதை கணிக்க தவறிவிடுகிறார்கள். பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்களைப் போல அல்லாமல், வளைகுடா NRI-கள் தங்களின் ஓய்வூதியத்தை அவர்களேதான் உருவாக்க வேண்டும். இங்கே ஒரு நல்ல செய்தி! நிம்மதியான ஓய்வுக்காலம் என்பது அதிர்ஷ்டம் சார்ந்தது அல்ல; அது முறையான திட்டமிடல் சார்ந்தது. SIP எளிய இலக்கோடு தொடங்குவோம்: ஓய்வுக்காலத்தில் மாதம் ரூ. 50,000 வருமானம்! இன்றைய தேதியில் ரூ. 50,000 என்பது பெரிய தொகையாக தெரியாமல் போகலாம். ஆனால், சொந்த வீடு வைத்திருக்கும் ஒரு முதிய தம்பதிக்கு, இந்தியாவின் வீட்டுச் செலவுகள், மருத்துவம், ஆன்மிகச் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குகளுக்கு இந்தத் தொகை தாராளமாகப் போதும். மாதம் ரூ. 50,000 பெற, வருடத்திற்கு ரூ. 6 லட்சம் தேவை. உலகளாவிய நிதி ஆலோசகர்கள் 4% வித்ட்ராயல் விதியை பரிந்துரைக்கிறார்கள். இதன்படி, உங்களிடம் ரூ. 1.5 கோடி ரிட்டையர்மென்ட் ஃபண்ட் இருந்தால், ஆண்டுக்கு ரூ. 6 லட்சத்தை தைரியமாக எடுக்கலாம். மீதமுள்ள பணமும் முதலீட்டிலேயே நீடித்து வளர்ந்து கொண்டே இருக்கும். இப்போது அடுத்த கேள்வி: "ஓய்வு பெறுவதற்குள் என்னால் ரூ. 1.5 கோடியை சேர்க்க முடியுமா?" வளைகுடா NRI-களால் இது நிச்சயம் சாத்தியம்! 40 வயதுள்ள ஒரு NRI, இந்திய பங்குச்சந்தை மியூச்சுவல் ஃபண்டுகளில் 'எஸ்.ஐ.பி' (SIP) முறையில் மாதம் ரூ. 20,000 முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்திய பங்குச்சந்தையின் நீண்டகால சராசரி வளர்ச்சியான 12% லாபத்தைக் கணக்கிட்டால், அடுத்த 20 ஆண்டுகளில் இந்த முதலீடு கிட்டத்தட்ட ரூ. 2 கோடியாக விஸ்வரூபம் எடுக்கும்! ஒருவேளை, சந்தை சுணங்கி 10% லாபம் கொடுத்தால் கூட, உங்கள் கையில் ரூ. 1.5 கோடி இருக்கும்! இதுதான் கூட்டு வட்டியின் (Compounding) அசாத்திய பவர்! பலரும் நினைப்பது போல, அதிக பணம் சம்பாதிப்பதால் மட்டும் யாரும் கோடீஸ்வரன் ஆவதில்லை. பணத்திற்கு வளர போதுமான கால அவகாசம் தருவதில்தான் ரகசியமே ஒளிந்திருக்கிறது. ஆரம்ப வருடங்களில் வளர்ச்சி மெதுவாகத் தெரியும். போகப்போக, முதலீட்டின் லாபத்தில் இருந்து மேலும் லாபம் முளைக்கும். ஒரு கட்டத்தில், நீங்கள் முதலீடு செய்த அசலை விட, கூட்டு வட்டியால் கிடைத்த லாபமே விஸ்வரூபம் எடுத்து நிற்கும். அதனால்தான், சரியான முதலீட்டை தேடி அலைவதை விட, சீக்கிரமாக முதலீடு செய்யத் தொடங்குவது முக்கியம்! ரிட்டையர் ஆனதும், இந்த மொத்தப் பணத்தையும் ஒரே அடியாக எடுக்காமல் 'எஸ்.டபிள்யூ.பி' (SWP) முறையில் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம், மீதிப் பணம் முதலீட்டில் வளர்ந்து கொண்டிருக்க, உங்களுக்கு மட்டும் மாதம் ரூ. 50,000 பென்ஷன் போல வங்கிக் கணக்கிற்கு வந்துகொண்டே இருக்கும். SWP Benefits |Happy Retirement இது உங்கள் ஓய்வுக்காலத்திற்கு ஒரு நிமிர்ந்த துணிச்சலையும், நிம்மதியையும் தரும்! பணம் என்பது வெறும் காகிதம் அல்ல; அது உங்கள் எதிர்காலத்திற்கான உழைப்பின் சேமிப்பு. இன்று நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும், நாளை நீங்கள் சுதந்திரமாக வாழப்போகும் ஒரு நாளுக்குச் சமம். நிதியுதவிக்காக பிள்ளைகளையோ, சொந்தங்களையோ எதிர்பார்க்காமல், தலைநிமிர்ந்து வாழ இந்தத் திட்டம் உதவும். ஸ்மார்ட் NRI-கள் செய்யும் 3 விஷயங்கள்: முதலில் உங்களுக்கே சம்பளம் கொடுங்கள்: சம்பளம் வந்ததும், செலவு போக மீதியைச் சேமிக்காமல், முதலில் முதலீட்டை ஒதுக்கிவிட்டு மீதியைச் செலவழியுங்கள். SIP தொகையை உயர்த்துங்கள்: ஒவ்வொரு வருடமும் முதலீட்டுத் தொகையை 5%-10% அதிகரியுங்கள். இது உங்கள் இலக்கை வேகமாக்கும். நீண்ட காலம் முதலீடு செய்யுங்கள்: சந்தையின் ஏற்ற இறக்கங்களை கண்டு பயந்து பணத்தை எடுக்காதீர்கள். தவிர்க்க வேண்டிய 3 தவறுகள்: முதலீட்டை தள்ளிப்போடுவது: கூட்டு வட்டிக்கு மிகப்பெரிய எதிரி 'நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்கிற அலட்சியம்தான். குறுக்கு வழி லாபத்திற்கு ஆசைப்படுவது: பேராசையில், நம்பிக்கை இல்லாத திட்டங்களில் பணத்தைப் போட்டு கஷ்டப்பட்டு சேர்த்த உழைப்பை இழந்துவிடாதீர்கள். பணவீக்கத்தை மறப்பது: விலைவாசி உயர்வு காரணமாக இன்று போதுமானதாகத் தெரியும் தொகை, இருபது வருடங்கள் கழித்துப் பத்தாமல் போகலாம். இதனை மனதில் கொண்டு விலைவாசி உயர்வைத் தாண்டிய வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். 40 முதல் 60 வயது வரையிலான காலகட்டம்தான் வளைகுடா NRI-களின் பொற்காலம். இந்த வெளிநாட்டு வருமானம் உங்கள் சொந்த மண்ணில் நிரந்தரப் பொருளாதார சுதந்திரத்தை உருவாக்கக்கூடியது. நினைவிருக்கட்டும், இந்தக் கனவு வெறும் ரூ. 50,000 பென்ஷனுக்கானது மட்டுமல்ல. 60 வயதில் காலையில் கண்விழிக்கிற போது, 'நாம் வளைகுடாவில் சிந்திய வியர்வை வீண் போகவில்லை, அது நமக்கு சுயமரியாதையையும், நிம்மதியான சுதந்திரத்தையும் தந்துவிட்டது' என்ற பெருமிதத்தோடு வாழ்வதற்கானது! 60 வயதில் ₹50000 பென்ஷன் பெறுவது எப்படி? வளைகுடா வாழ் தமிழர்களுக்காக வரும் சனிக்கிழமை மதியம் 12:30 மணி (இந்திய நேரம்) 'செல்வத்தை உருவாக்குவது எப்படி?' என்ற தலைப்பில் ஆன்லைன் ஒர்க் ஷாப் நிகழ்ச்சியை மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான லாபம் நடத்துகிறது. இதில் உங்கள் பணத்தை நிர்வகிக்கும் கலை முதல் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் மாத பென்ஷன் பெறுவது வரை அனைத்தையும் நிபுணர்கள் சொல்லித் தர உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி. நிகழ்ச்சியில் பங்கேற்க: https://labham.money/events/webinar-jun27-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_jun27_2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor




