தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி, இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு, 2001-ஆம் ஆண்டு 'ஆனந்தம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து 'ரன்', 'ஜி', 'பீமா', 'பையா', 'சண்டக்கோழி', 'வேட்டை', 'அஞ்சான்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த 'ரன்' திரைப்படம் வருகிற ஜூலை 10-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 'ரன்' படத்தை விஜய்க்காகத்தான் உருவாக்கினேன் 'ரன்' திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, நடிகர் விஜய் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்தார். அப்போது அவர், "இந்தப் படத்தை முதலில் விஜய் சாரை வைத்து இயக்குவதற்காகவே ஏ.வி.எம். நிறுவனத்திலிருந்து என்னை அனுப்பி வைத்தார்கள். நான் எஸ்.ஏ. சந்திரசேகர் சாரை சந்தித்து கதையை கூறினேன். ஆனால் அப்போது விஜய் சாரின் பட வரிசை வேறு மாதிரியாக திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் 'தமிழன்' படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருந்தார். 'ஒரு பெண்ணின் பின்னால் சுற்றும் காதல் கதையை இப்போது செய்ய வேண்டாம்' என்று எஸ்.ஏ. சந்திரசேகர் சார் கூறி அந்தக் கதையை மறுத்துவிட்டார்," என்றார். 'சண்டக்கோழி', 'வேட்டை' படங்களும் விஜய்க்காகத்தான் தொடர்ந்து பேசிய லிங்குசாமி, "'சண்டக்கோழி' மற்றும் 'வேட்டை' திரைப்படங்களும் முதலில் விஜய் சாருக்காகத்தான் எழுதப்பட்ட கதைகள். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தப் படங்கள் அவருடன் இணையாமல் போய்விட்டன," என்று தெரிவித்துள்ளார். லிங்குசாமியின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/three-hit-films-vijay-was-supposed-to-star-in-lingusamy-reveals-the-secret




