சென்னை, கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நட்பின் நிமித்தமாய் நலம்கேட்கச் சென்றேன்; பொன்னாடை அணிவித்தேன். ஞானபீடத்தின் பெருமையறிந்து வீட்டுக்கே வந்து வாழ்த்திய அந்நாள் முதல்-அமைச்சர், பெற்றுவந்த விருதுக்காக மீண்டுமொரு பொன்னாடை அணிவித்தார். ஆட்ட நாயகன் பொன்னாடைக்குப் பொன்னாடை“எதைக் கொடுக்கிறாயோ அதையே பெறுவாய்” என்ற முதுமொழி என் மூளைக்குள் ஓடியது. ஒருவரை ஒருவர் கொண்டாடிக் கொண்டோம். சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை முக்கால் மணிநேரம் இருவரும் கண்டுகொண்டிருந்தோம். "ஜே.சி.டி பிரபாகர் சிறப்பாக நடத்துகிறார் சட்டமன்றத்தை" என்றார் தி.மு.க தலைவர். "சட்டமன்றத்தின் ஆட்ட நாயகன்" என்று சமூக ஊடகங்கள் சபாநாயகரைப் பேசுகின்றன என்றேன். "அப்படியா" என்றார். ஓர் அழகான காபி குடித்து முடித்து வாழ்த்தி விடைகொண்டேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/poet-vairamuthu-met-mk-stalin-and-inquired-about-his-well-being




