ஈரோடு, திண்டலில் உள்ள ஹார்ஸ் ரைடிங் கிளப்பில் ஆகஸ்ட் 9, 10 ஆகிய இரண்டு நாள்கள் அகில இந்திய அளவிலான குதிரையேற்றப் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. ஈரோட்டில் முதன்முறையாக நடைபெற்ற இப்போட்டியில், ஊட்டி, மும்பை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குதிரைகள் அழைத்து வரப்பட்டன. மேலும், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்று போட்டியைச் சிறப்பித்தனர். இப்போட்டியின் சிறப்பம்சமாக, 7 வயது முதல் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறு வயதிலேயே குதிரையேற்றப் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள், பல்வேறு பிரிவுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டிக்காக சுமார் 3 மாதங்களாகக் கடுமையான பயிற்சி மேற்கொண்டதாக போட்டியாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, Endurance மற்றும் Dressage போட்டிகளில் பங்கேற்றது தங்களுக்கு புதிய அனுபவத்தை அளித்ததாகவும், குதிரைகளுடன் நல்ல emotional bonding ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர். மேலும், திறந்தவெளியில் குதிரையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்தப் போட்டியின் மூலம் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தனர். “இந்தப் போட்டி எங்களுக்கு ஒரு நல்ல மற்றும் புதிய அனுபவத்தை வழங்கியுள்ளது. குதிரையுடன் இணைந்து செயல்படுவது, அதை கட்டுப்படுத்துவது என பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என போட்டியாளர்கள் தெரிவித்தனர். இந்த அகில இந்தியக் குதிரையேற்றப் போட்டி பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் Show Jumping, Dressage, Barrel Racing, Pole Bending உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் அடுத்தகட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர். குதிரையேற்றத்தில் Dressage, Show Jumping, Eventing ஆகியவை ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் முக்கியப் பிரிவுகளாகும். Dressage போட்டியில் குதிரையின் கட்டுப்பாடு, இயக்கம் மற்றும் வீரரின் துல்லியம் ஆகியவை முக்கியமாகக் கருதப்பட்டன. Show Jumping போட்டியில் பல்வேறு உயரங்களில் அமைக்கப்பட்ட தடைகளை, குறிப்பிட்ட நேரத்திற்குள் குதிரையுடன் இணைந்து தாண்ட வேண்டியிருந்தது. தடைகளைத் தட்டாமல் அல்லது தொடாமல் தாண்டுவது போட்டியின் முக்கிய அம்சமாக இருந்தது. இப்போட்டியில் இந்தியாவின் மகாராஷ்டிரா, தெலங்கானா, புனே, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஈரான், அயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வீரர்கள் பங்கேற்றனர். போட்டியின் ஒரு பகுதியாக 40 முதல் 60 சென்டிமீட்டர் மற்றும் 80 முதல் 90 சென்டிமீட்டர் உயரம் கொண்ட தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. வீரர்கள் குதிரைகளுடன் இணைந்து, எந்தத் தடையையும் தட்டாமல் அல்லது தொடாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் தடைகளைத் தாண்டினர். குதிரைகளின் வேகம், வீரர்களின் திறமை, கட்டுப்பாடு மற்றும் துல்லியம் என பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டி, பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://sports.vikatan.com/erode-horse-riders-stun-crowd-with-show-jumping-dressage-barrel-racing-pole-bending




