சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 469 விசைப்படகுகளில், மீனவர்கள் நேற்று முன்தினம் (22.07.2026) கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்களில் 9 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் 9 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது உடைமைகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர். மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மாலிக்தினார், கயாஸ், செந்தில், கிரித்திசன், பிரவீன், அருள்லயோலா, சவுரி வினோத்வின், தேவசகாயம், இன்பென்ட் பிரசாத் ஆகிய 9 மீனவர்களையும் விடுவித்து, அவர்களது உடைமைகளையும் மீட்டு தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், தமிழ்நாடு முதல்-அமைச்சர், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களை விடுதலை செய்ய உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-appeals-to-the-chief-minister-to-release-the-fishermen-captured-by-the-sri-lankan-navy




