சென்னை, வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- ஈரான் மீது சர்வதேச சட்டங்களுக்கு எதிராக, ஐக்கியநாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கு எதிராக அமெரிக்கா, தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் ஹார்முஸ் நீரிணையில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது. இந்த ஹார்முஸ் நீரிணை வழியிலான கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை காரணமாகப் பயன்படுத்திக் கொண்டு சமையல் எரிவாயு விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மூன்று முறை வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. 1768 ரூபாய் 50 காசுக்கு விற்று வந்த வணிக சிலிண்டர், 2 ஆயிரத்து 246 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டது. இதனால் பல உணவகங்கள், தொழிலகங்கள் மூடப்பட்டன. தேநீர், காபி போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. கண்டனம் இந்த சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் காரணமாக கடந்த மாதம் ரூபாய் 192 விலை குறைக்கப்பட்டது. ஜூலை மாதம் ரூபாய் 153 விலை குறைக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது மீண்டும் ஒரு சிலிண்டருக்கு 9 ரூபாய் 50 பைசா விலை உயர்தப்பட்டுள்ளது. இதுமக்கள் நலன்களுக்கு எதிரானது, கடும் கண்டனத்திற்குரியது. எனவே, வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும். அதன் விலையை குறைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-condemns-the-hike-in-commercial-lpg-cylinder-prices




