சிபிஐஎம் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``நாங்கள் அமைச்சரவையில் சேரவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் மிகத் தெளிவான முடிவை எடுத்திருக்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் அமைச்சரவையில் சேர மாட்டோம். அன்றிருந்த சூழ்நிலையில் ஆட்சி அமையாமல் போய்விடக் கூடாது என்பதற்காகவும், தவெக-வைத் தவிர வேறு யாருக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்பதற்காகவும்தான் நாங்கள் ஆதரவு அளித்தோம். முதல்வர் விஜய் மற்றபடி நாங்கள் அமைச்சரவையில் சேரவோ அல்லது அவர்களின் கூட்டணி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கவோ மாட்டோம். நாங்கள் அந்த கூட்டணியில் இல்லை, எனவே அவர்களின் கூட்டங்களுக்கும் போகப் போவதில்லை என்பதில் தெளிவான முடிவை ஏற்கனவே கூறிவிட்டோம். கடந்த மாதம் தவெக கூட்டணிக் கட்சிகள் கூடிய கூட்டத்திற்கே நாங்கள் செல்லவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், இன்று நாங்கள் திமுக கூட்டணியிலோ அல்லது வேறு எந்தக் கூட்டணியிலோ இல்லை. இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளோம். அடுத்த மாதம் திருச்சியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் பெரிய பேரணி உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தவுள்ளோம். உதயநிதி ஸ்டாலின் அந்தப் பயணத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். இடைத்தேர்தல் அறிவிப்பு நேற்றுதான் வெளியாகியுள்ளது. இனிமேல் தான் எங்கள் கட்சியில் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுக்க முடியும். தேர்தலில் யாருக்காவது ஆதரவு அளிப்பதா, அளிக்காமல் இருப்பதா அல்லது யாருக்கு ஆதரவு அளிப்பது போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் இனிமேல் தான் பேசி முடிவெடுக்க வேண்டும்." என்றார். "முதலமைச்சரே உருவக்கேலி செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்" - பெ.சண்முகம் கண்டனம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/k-balakrishnan-has-clarified-that-they-are-not-part-of-any-alliance




