சியோல், டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்தியா-தென்கொரியா அணிகள் மோதும் ஆட்டம் தென்கொரியா தலைநகர் சியோலில் இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று நடைபெறும் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் தரவரிசையில் 367-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் தஷினேஸ்வர், தரவரிசையில் 157-வது இடத்தில் இருக்கும் சூன்வூ குவோனை (தென்கொரியா) எதிர்கொள்கிறார். இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் தரவரிசை யில் 247-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல், 549-வது இடத்தில் உள்ள ஹையோன் சுங்குடன் (தென்கொரியா) மோதுகிறார். நாளை நடைபெறும் இரட்டையர் ஆட்டத்தில் ஸ்ரீராம் பாலாஜி-நிக்கி போனச்சா (இந்தியா) இணை, தென்கொரியாவின் ஜிசுங் நாம்-உய்சுங் பார்க் ஜோடியை சந்திக்கிறது. மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல்- சூன்வூ குவோன். தஷினேஸ்வர்-ஹையோன் சுங் மோதுகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, 8 அணிகள் இடையிலான இறுதிசுற்றுக்கு முன்னேறும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/tennis/davis-cup-tennis-india-vs-south-korea-matchstarts-today




