வாஷிங்டன், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 4 மாதங்களுக்கும் மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையால் அமெரிக்காவுக்கு சராசரியாக ஒருநாளைக்கு சுமார் 8 ஆயிரம் கோடிகளும் இதுவரை ரூ.3 லட்சம் கோடிக்கும் மேல் செலவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை மற்றும் ஆயுத இருப்பு கணிசமாக குறைந்துள்ளது. 111 லட்சம் கோடி இந்நிலையில், ராணுவத்தை பலப்படுத்த. 111 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கும் மசோதாவுக்கு, அமெரிக்கா கீழ்சபையான பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. மசோதாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கு இடையே ராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஊதிய உயர்வு மேலும், அமெரிக்கப் படை வீரர்களுக்கு 5 முதல் 7 சதவிதம் வரை ஊதிய உயர்வு வழங்க முன்மொழியப் பட்டுள்ளது.இஸ்ரேலின் 'அயர்ன் டோம்'ஏவுகணைத் தடுப்பு அமைப்பை போன்று. 'கோல்டன் டோம் என்ற புதிய ஏவுகணைத் தடுப்பு அமைப்பை அதிபர் உருவாக்க டொனால்டு டிரம்ப்திட்டமிட்டுள்ளார். இதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/us-military-budget-approved-amidst-wartime-conditions-do-you-know-the-staggering-figure




