சோகோ கொலம்பியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆனது வெனிசுலா, ஈகுவேடாரிலும் உணரப்பட்டு உள்ளது. கொலம்பியாவில் இன்று சக்தி வாய்ந்த ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில், 7.4 ஆக இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம், கொலம்பியாவின் சோகோ மாகாண பகுதியில் சான் ஜோஸ் டெல் பால்மருக்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவில், 107 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகள் உட்பட, கொலம்பியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், கட்டிடங்கள் சேதமடைந்தன. பலர் அலறியடித்து கொண்டு, வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். வெனிசுலா எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இதுபற்றி சோகோ மாகாண கவர்னர் கரோலினா கூறும்போது, சோகோவில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நிறைய பேர் காயமடைந்து உள்ளனர். சேத விவரங்களை பற்றி நாங்கள் ஆய்வு பணிகளை தொடங்கி விட்டோம் என்றார். வெனிசுலா எல்லை, ஈகுவேடாரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வெனிசுலாவில் 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். பலரை காணவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/powerful-earthquake-colombia-buildings-shaken-felt-venezuela-ecuador




