திருநெல்வேலி, நெல்லை மாநகரம் பெருமாள்புரம், மேலப்பாளையம் பகுதிகளில் 2 கிலோ 250 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள், 2 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர். வாகன சோதனை திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரம் மற்றும் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியான 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன், 2 பைக் பறிமுதல், 2 பேர் கைது இதனையடுத்து உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய போதை பொருளான கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர்களான பெருமாள்புரத்தைச் சேர்ந்த சுகுமார் (வயது 23), மேலப்பாளையத்தைச் சேர்ந்த திவான்மைதீன்(22) ஆகிய 2 பேரிடமும் இருந்து மொத்தம் 2 கிலோ 250 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் 2 பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/22-kg-of-ganja-2-bikes-seized-in-nellai-2-youths-arrested




