நாளை (ஜூலை 10) கரூர் செல்லும் முதல்வர் விஜய், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் முடிவை தவெக அரசு ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் எம்.பி. சுப்பராயன் வலியுறுத்தி இருக்கிறார். கரூர் சம்பவம் இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் சமூக வலைத்தளப் பதிவில், "அரசியல் கட்சிகளால் ஏற்பாடுசெய்து நடத்திய கூட்டங்களில் கூட்டநெரிசல்களில் ஏற்படும் மரணங்களுக்கு, அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும். "திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் அரசுப்பணி கிடைக்குமென்றால்." - சீமான் இந்த முடிவை அதிகாரத் துஷ்பிரயோகம் என்றே வரலாறு பதிவு செய்யும். மேலும் எதிர்காலத்தில் அரசிற்குக் கடும் நெருக்கடிகளை இந்த முடிவு ஏற்படுத்தும். இழப்பை ஈடுகட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் சம்பந்தப்பட்ட கட்சிகளைச் சார்ந்ததாகும். முதல்வர் விஜய் அவைதான் அதைச் செய்ய வேண்டும். அதைச் செய்வதற்கு முழுத்தகுதி படைத்த கட்சிதான் தவெக. அந்தப் பொறுப்பை நிறைவேற்றி முடிக்காமல் தட்டிக் கழித்துவிட்டு, அதை அரசின் தலையில் சுமத்துவதை ஜனநாயக அரசியல் அமைப்பு ஏற்காது. தவெக அரசு ஆழமாகச் சிந்திக்க வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார். கரூர் விசிட்: 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் விஜய்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/cpi-mla-urges-state-government-drop-jobs-for-karur-victims-families




