இதுவரை ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறேன் என்றுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்தார். ஆனால், தற்போது அமெரிக்காவின் பிராந்தியமாகவே ஹார்முஸ் நீர்ச்சந்தி ஆகிவிட்டது என்று பேசியிருக்கிறார். நேற்று (ஆகஸ்ட் 21) அமெரிக்காவில் நடந்த நிகழ்வு ஒன்றில், “ஈரான் அணு ஆயுதத்தைப் பெற நாம் அனுமதிக்கக் கூடாது. ஈரான் அணு ஆயுதம் ஏந்துவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மீறினால் மிக மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். ஹார்முஸ் நீர்ச்சந்திEconomic D-Day: பில்லியன் டாலர் ஆயுதங்களால் முடியாததை தடைகளால் செய்ய முடியுமா? ட்ரம்பின் திட்டம்! அமெரிக்கா களமிறங்கி அவர்களைத் தடுத்து நிறுத்தினோம். அவர்கள் இனி ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறவே முடியாது. ஈரான் ஒப்பந்தம் செய்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறது. தெஹ்ரானுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதில் வாஷிங்டன் (அமெரிக்கா) எந்த அவசரமும் காட்டவில்லை. அவர்கள் எப்படியாவது ஒப்பந்தம் செய்துகொள்ளத் துடிக்கிறார்கள், ஆனால் நமக்கு [ஒப்பந்தம்] வேண்டுமா என்பதே நமக்குத் தெரியவில்லை. ஏனென்றால், ஹார்முஸ் நீர்ச்சந்தியை இப்போது நான் அமெரிக்காவின் சொந்தப் பகுதியாகவே பார்க்கிறேன். அது அமெரிக்காவின் பிராந்தியம்" என்று பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/trump-says-strait-of-hormuz-is-now-us-territory




