டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களை ‘ஜிஎம்ஆர்’ நிறுவனம் நிர்வகித்து வரும் சூழலில், சென்னை விமான நிலைய நிர்வாகத்தையும் தனியார் அல்லது பிற அமைப்புகளின் நிர்வாகத்திற்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முயன்று வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் வகையில், சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றக் கோரி முதலமைச்சர் விஜய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள உள்கட்டமைப்புகளின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில், இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜிஎம்ஆர் குழுவினருடன் முதல்வர் விஜய் இந்த செய்திக்கு விளக்கமளிக்கும் வகையில், இராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், ``பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை வசதிகளும் கட்டமைப்பு வசதிகளும் எப்போதும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். மின்சார விநியோகம், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பொதுமக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதே மிக அவசியமாகும். இவை அனைத்தும் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நேரடித் தொடர்புடைய அடிப்படைச் சேவைகளாக இருப்பதால், இதில் அரசின் முழுமையான கண்காணிப்பு இருக்க வேண்டும். இத்தகைய பொதுச் சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டு, எந்தவொரு தனியார்க் குழுமத்தின் கைக்கும் செல்லும்போது, சாதாரணப் பொதுமக்களுக்கு அவை விலை உயர்ந்தவையாகவும் எட்டாக்கனியாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது. வணிக நோக்கம் கொண்ட தனியார் நிர்வாகத்தின் கீழ் இவை செல்லும் போது, எளிய மக்களுக்கான அணுகல் பாதிக்கப்படக்கூடும். சென்னை விமான நிலையம் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் முழுமையாக அரசிடம் இருக்கும்போது மட்டுமே, அதில் 100% உரிமையும் பாதுகாப்பும் மக்களுக்குத் தடையின்றிச் சென்றடையும். அரசு சேவைகளின் நோக்கம் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும் என்பதால், பொதுப் பயன்பாட்டு இடங்கள் தனியார்மயமாவதைத் தவிர்த்து, அரசின் பொறுப்பிலேயே வைத்திருப்பதே ஆரோக்கியமான சமூகத்திற்கு உகந்தது. அதுவே நம் எண்ணம். நம் அரசும் அதை நோக்கித்தான் இருக்கும், பார்க்கலாம்." என்றார். "தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/nirmal-kumar-spoke-about-chennai-airport-controversy




